எமபயம் போக்கும் தண்டீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
எமபயம் போக்கும் தண்டீஸ்வரர்
வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில். வேள்விச்சேரி என்ற சொல் மருவி வேளச்சேரி எனும் பெயர் வந்ததாகவும், இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தரசோழன் காலத்தில் (கி.பி.957-973) இக்கோயில் சுயம்பு வடிவமாக தோன்றியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயம் இரண்டு பிரகாரங்களை கொண்டுள்ளது. தெற்கு வாயிலின் வழியாக உள்ளே நுழைகையில் அலங்கார மண்டபத்திலிருந்து வேத விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இடப்புறம் அறுபத்து மூவர்களின் திருவுருவமும், வடபகுதியில் விநாயகர், சுப்பிரமணியருடன் லிங்கத்திருமேனியும், வில்வ மரத்தின் அடியில் வைத்தீஸ்வரனும் அருள் பாலிக்கின்றனர்.
ஆலய மூலவரான அருள்மிகு தண்டீஸ்வரரின் அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் தண்டீஸ்வரருக்கு ஆறுகால பூஜையும், அம்மனுக்கு மூன்றுகால பூஜையும் நடைபெறுகிறது. தினசரி வழிபாடுகள் செய்து உச்சிகால பூஜை முடிந்ததும் ஆலயநடை சாத்தப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கபடுகிறது. திருக்கடையூரில் சிவபெருமான் தண்டாயுதத்தை பெற்று கொண்டதால், எமன் இங்கு வந்து குளம் அமைத்து அதிலிருந்து நீரைக்கொண்டு சிவனுக்கு பூஜை செய்து தண்டாயுதத்தை பெற்றதாக வரலாறு எடுத்துரைக்கிறது.
அதனால் இங்குள்ள குளம் எமதீர்த்தகுளம் என்ற பெயரை பெற்றதாகவும் புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாக திருக்கடையூருக்கு அடுத்து 60ம் கல்யாணம் செய்ய பலர் இங்கு வருவதும், இங்கு வந்தால் எமபயம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். எப்படி போகணும்: வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளிலிருந்து ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உள்ளது.
ஆலய மூலவரான அருள்மிகு தண்டீஸ்வரரின் அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் தண்டீஸ்வரருக்கு ஆறுகால பூஜையும், அம்மனுக்கு மூன்றுகால பூஜையும் நடைபெறுகிறது. தினசரி வழிபாடுகள் செய்து உச்சிகால பூஜை முடிந்ததும் ஆலயநடை சாத்தப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கபடுகிறது. திருக்கடையூரில் சிவபெருமான் தண்டாயுதத்தை பெற்று கொண்டதால், எமன் இங்கு வந்து குளம் அமைத்து அதிலிருந்து நீரைக்கொண்டு சிவனுக்கு பூஜை செய்து தண்டாயுதத்தை பெற்றதாக வரலாறு எடுத்துரைக்கிறது.
அதனால் இங்குள்ள குளம் எமதீர்த்தகுளம் என்ற பெயரை பெற்றதாகவும் புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாக திருக்கடையூருக்கு அடுத்து 60ம் கல்யாணம் செய்ய பலர் இங்கு வருவதும், இங்கு வந்தால் எமபயம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். எப்படி போகணும்: வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளிலிருந்து ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சாபம் போக்கும் வரமூர்த்தீஸ்வரர்
» தோஷம் போக்கும் வாமனபுரீஸ்வரர்
» துன்பம் போக்கும் காளிதேவி
» நாக தோஷம் போக்கும் விரதம்
» மரண பயம் போக்கும் விரதம்
» தோஷம் போக்கும் வாமனபுரீஸ்வரர்
» துன்பம் போக்கும் காளிதேவி
» நாக தோஷம் போக்கும் விரதம்
» மரண பயம் போக்கும் விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya