மணமாலை மங்கலம் அருளும் முருகன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மணமாலை மங்கலம் அருளும் முருகன்
முருகனுக்கே திருமணம் நடந்த தலம் மயிலம். அதனால் இங்கு திருமணம் செய்து கொள்வது விசேஷம் என கருதப்படுகிறது. நிறைய பேர் இதை வேண்டுதலாகவே செய்கிறார்கள். முகூர்த்த நாட்களில் இந்த மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. வள்ளி-தெய்வானையுடன் நின்றிருக்கும் கோலம். ஒரு கையில் வேல், இன்னொரு கையில் சேவற்கொடி. பொதுவாக முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். ஆனால், இங்கு மட்டும் வடக்கு நோக்கியபடி இருக்கிறது. சூரபதுமன் இங்கு வடக்கு நோக்கி தவமிருந்து முருகனின் வாகனம் ஆனதால் அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை மயிலுக்கு கிடைத்திருக்கிறது.
நொச்சி, முருகனுக்கு மிகவும் உகந்த மரம். மயிலம் மலையில் நிறைய நொச்சி மரங்கள் உள்ளன. தினமும் காலை பூஜையின் போது நொச்சி இலைகளை பறித்து மாலையாக தொடுத்து முதலில் அதைத்தான் மூலவருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே பூமாலைகள் முருகனை அலங்கரிக்கின்றன. மூலவர் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் காலை சந்தி பூஜையின் போது வேல் அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லை தீர்ந்து பணப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை.
இங்கே முருகனுக்கு மூன்று விதமான உற்சவர்கள். பிரதான உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத பால சுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும் மாலை பூஜைக்கு பிறகு தங்கக்காப்பு அணிந்தும் அருள்பாலிக்கும் இவர் மாதாந்திர கிருத்திகைகளிலும் பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா வருகிறார். முருகனுக்கு மயில் மட்டுமின்றி பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினமும் மயில், யானை, ஆட்டுக்கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வீதிவுலா வருகிறார் இந்த உற்சவர்.
இரண்டாவது உற்சவர், வள்ளி-தெய்வானையுடனான முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திர தினத்தில் வீதிவுலா வரும் இவர், பொதுவாக, சுற்றுப்பிராகாரத்தில் கொலுவிருந்து அருள்பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின் போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்கு தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கே இருந்து அருளாசி வழங்கிவிட்டு திரும்பி வருவார் இவர். மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்களை கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின் போது ஆறு நாட்கள் வீதிவுலா வருகிறார் இவர்.
உற்சவமூர்த்தியாக திகழும் முருகன் அருகில் அவரது படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக வீற்றிருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்கு பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம்.
நொச்சி, முருகனுக்கு மிகவும் உகந்த மரம். மயிலம் மலையில் நிறைய நொச்சி மரங்கள் உள்ளன. தினமும் காலை பூஜையின் போது நொச்சி இலைகளை பறித்து மாலையாக தொடுத்து முதலில் அதைத்தான் மூலவருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே பூமாலைகள் முருகனை அலங்கரிக்கின்றன. மூலவர் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் காலை சந்தி பூஜையின் போது வேல் அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லை தீர்ந்து பணப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை.
இங்கே முருகனுக்கு மூன்று விதமான உற்சவர்கள். பிரதான உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத பால சுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும் மாலை பூஜைக்கு பிறகு தங்கக்காப்பு அணிந்தும் அருள்பாலிக்கும் இவர் மாதாந்திர கிருத்திகைகளிலும் பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா வருகிறார். முருகனுக்கு மயில் மட்டுமின்றி பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினமும் மயில், யானை, ஆட்டுக்கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வீதிவுலா வருகிறார் இந்த உற்சவர்.
இரண்டாவது உற்சவர், வள்ளி-தெய்வானையுடனான முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திர தினத்தில் வீதிவுலா வரும் இவர், பொதுவாக, சுற்றுப்பிராகாரத்தில் கொலுவிருந்து அருள்பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின் போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்கு தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கே இருந்து அருளாசி வழங்கிவிட்டு திரும்பி வருவார் இவர். மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்களை கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின் போது ஆறு நாட்கள் வீதிவுலா வருகிறார் இவர்.
உற்சவமூர்த்தியாக திகழும் முருகன் அருகில் அவரது படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக வீற்றிருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்கு பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மங்கலம் தழைத்திடச் செய்யும் மணிகர்ணிகாபுஷ்கரணி!
» மங்கலம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
» குழந்தை வரம் அருளும் அமிர்தலிங்கேஸ்வரர்
» மங்களம் அருளும் மரகதாம்பிகை
» மங்கலம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
» குழந்தை வரம் அருளும் அமிர்தலிங்கேஸ்வரர்
» மங்களம் அருளும் மரகதாம்பிகை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya