தசரா விழா கோலாகலம் : பக்தர்கள் வருகையால் குலுங்கியது குலசை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தசரா விழா கோலாகலம் : பக்தர்கள் வருகையால் குலுங்கியது குலசை
உடன்குடி: குலசேகரன்பட்டணம் தசரா திருவிழாவில் நேற்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடந்தது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜையும், பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் திரு விழாவான நேற்று (14ம் தேதி) நள்ளிரவு நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் இரவு 11 வரை சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி, லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மத்தியில் மகிஷாசூரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று (15ம் தேதி) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதலும், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு அம்மன் திருக்கோயிலுக்கு வந்து சேர்தலும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு காப்பு களைதலும், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கிறது. 16ம் தேதி பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
தசரா திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டணத்தில் குவிந்தனர். பக்தர்கள் பலரும் பல்வேறு மாறு வேடங்கள் அணிந்து குலசேகரன்பட்டணம் முழுவதும் வலம் வந்தனர். பலர் அருள் வந்து சாமியாடினர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் குலசேகரன்பட்டணமே குலுங்கியது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சங்கர், தூத்துக்குடி தக்கார் செல்லத்துரை, இணைஆணையர் அன்பு மணி ஆகியோர் செய்திருந்தனர்.
மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜையும், பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் திரு விழாவான நேற்று (14ம் தேதி) நள்ளிரவு நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் இரவு 11 வரை சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி, லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மத்தியில் மகிஷாசூரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று (15ம் தேதி) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதலும், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு அம்மன் திருக்கோயிலுக்கு வந்து சேர்தலும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு காப்பு களைதலும், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கிறது. 16ம் தேதி பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
தசரா திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டணத்தில் குவிந்தனர். பக்தர்கள் பலரும் பல்வேறு மாறு வேடங்கள் அணிந்து குலசேகரன்பட்டணம் முழுவதும் வலம் வந்தனர். பலர் அருள் வந்து சாமியாடினர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் குலசேகரன்பட்டணமே குலுங்கியது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சங்கர், தூத்துக்குடி தக்கார் செல்லத்துரை, இணைஆணையர் அன்பு மணி ஆகியோர் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தசரா திருவிழா கோலாகலம் : குலசை கடற்கரையில் சூரசம்ஹாரம்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya