Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கவரிமான் கொண்டை அணிந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காட்சி

Go down

கவரிமான் கொண்டை அணிந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காட்சி Empty கவரிமான் கொண்டை அணிந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காட்சி

Post by oviya Thu Dec 11, 2014 2:17 pm

வைகுண்ட ஏகாதசி விழா 3ம் நாள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 31ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. மறுநாள் பகல்பத்து உற்சவம் துவங்கியது. 3ம் நாளான இன்று நம்பெருமாள் கவரிமான் கொண்டை அலங்காரத்தில் புஜகீர்த்தி, ரத்தினலட்சுமி பதக்கம், வைர அரிச்சந்திர மாலை, புலிநக மாலை, கையில் ரத்தினகிளி, மார்பில் பெருமாள், தாயார் பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். மாலை 6.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

மூலவர் பெரிய பெருமாள் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொதுமக்கள் மூலவரை மாலை 5.30 மணி வரையும், பின்னர் மாலை 6.45 முதல் இரவு 8.30 மணி வரையும் தரிசனம் செய்யலாம். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 11ம் தேதி காலை 4.30 மணிக்கு நடக்கிறது. கோயிலில் ரயில் டிக்கெட் கவுன்டர் திறப்புதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் ஸ்ரீரங்கம் கோயில் ரெங்க விலாச மண்டபத்தில் சிறப்பு டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. கவுன்டரில் முன்பதிவு மற்றும் பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum