Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

Go down

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு Empty ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

Post by oviya Thu Dec 11, 2014 2:28 pm

21 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் நேற்று நிறைவடைந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 31ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவம் கடந்த 1ம் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாள் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கியது. ராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அதன்பின், நேற்று 21ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது. நேற்று நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனையொட்டி, உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நேற்று காலை நடத்தி காட்டடப்பட்டது.

அதனை முன்னிட்டு, நம்மாழ்வார் பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு முக்தன் வேடத்தில் வெள்ளை உடை உடுத்தி, பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சி அளித்தார். அதன்பின், நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர்.

அதன்பின் பல்வேறு வேதங்களை உச்சரித்தவாறு நம்மாழ்வார் மீது மூடப்பட்டு இருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர். நம்பெருமாள் முன்பு நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து நம்மாழ்வார் மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அதுசமயம், நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது. அதன்பின், காலை 8 மணி முதல் 9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

மூலஸ்தானத்திலிருந்து இயற்பா பிரபந்தம் இரவு 8 அளவில் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடைந்தது. கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவான 21 நாட்களில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் திருநாள் விடுமுறை காலங்களில் விழா வந்ததாலும், ஐயப்பன் பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செல்லும் பக்தர்களும் அதிக அளவில் வைகுண்ட ஏகாதசி விழாக்காலங்களில் சாமி தரிசனம் செய்ய வந்ததாலும் இந்த ஆண்டு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், கோயில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் விஜயன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கஸ்தூரி மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
» ஸ்ரீரங்கம் கோயிலில் சப்தாவரணம் நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
» வைகுண்ட ஏகாதசி : பார்த்தசாரதி கோயிலில் 11ல் பரமபத வாசல் திறப்பு
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum