ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
பகல்பத்து உற்சவம் தொடங்கியது
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கநாச்சியார் பகல்பத்து உற்ச வம் நேற்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று 22ம் தேதி முதல் உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி மற்றும் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.
வரும் 31ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. இதில் பகல்பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற் சவம் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது. பகல் பத்து உற்சவம் திருநெடுந்தாண்டகம் நிகழ் ச்சியுடன் நேற்று தொடங்கப்பட்டது. உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல்பத்து உற்சவமான திருமொழி பாசுரங்கள் 2ஆயிரம் பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுகிறார். இந்த உற்சவம் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மூலஸ்தானத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி 2ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை தாயார் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை. 26ம் தேதி ஸ்ரீரங்க நாச்சியார் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி, அரையர் சேவையுடன், முத்துக்குறி வியாக்யானம், அபிநயங்கள், அரையர் தீர்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் பகல் பத்து உற்சவம் நிறைவடைகிறது. ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் வரும் 27ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்க நாச்சியார் ராப்பத்து உற்சவத்தையொட்டி கோயில் உள்ளேயே போடப்பட்டுள்ள கொட்டகையில் தீர்த்த விநியோகம் நடத்திய பின்னர் கத்யத்ரய மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு எழுந்தருளுவார். அதனையொட்டி, ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டப மான கத்யத்ரய மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அலங்காரம், கோஷ்டி வகையறா முடிந்து இரவு 8.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா தாயார் சன்னதியின் உள்ளேயே நடத்தப்படுகிறது.
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கநாச்சியார் பகல்பத்து உற்ச வம் நேற்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று 22ம் தேதி முதல் உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி மற்றும் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.
வரும் 31ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. இதில் பகல்பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற் சவம் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது. பகல் பத்து உற்சவம் திருநெடுந்தாண்டகம் நிகழ் ச்சியுடன் நேற்று தொடங்கப்பட்டது. உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல்பத்து உற்சவமான திருமொழி பாசுரங்கள் 2ஆயிரம் பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுகிறார். இந்த உற்சவம் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மூலஸ்தானத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி 2ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை தாயார் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை. 26ம் தேதி ஸ்ரீரங்க நாச்சியார் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி, அரையர் சேவையுடன், முத்துக்குறி வியாக்யானம், அபிநயங்கள், அரையர் தீர்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் பகல் பத்து உற்சவம் நிறைவடைகிறது. ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் வரும் 27ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்க நாச்சியார் ராப்பத்து உற்சவத்தையொட்டி கோயில் உள்ளேயே போடப்பட்டுள்ள கொட்டகையில் தீர்த்த விநியோகம் நடத்திய பின்னர் கத்யத்ரய மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு எழுந்தருளுவார். அதனையொட்டி, ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டப மான கத்யத்ரய மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அலங்காரம், கோஷ்டி வகையறா முடிந்து இரவு 8.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா தாயார் சன்னதியின் உள்ளேயே நடத்தப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
» வைகுண்ட ஏகாதசி : பார்த்தசாரதி கோயிலில் 11ல் பரமபத வாசல் திறப்பு
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
» வைகுண்ட ஏகாதசி : பார்த்தசாரதி கோயிலில் 11ல் பரமபத வாசல் திறப்பு
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya