குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா
கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
குளச்சல் : மிகவும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக் காடு பகவதியம்மன் கோயி லில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 10 நாள் திரு விழா வெகு விமரிசையாக நடைபெறும். பெண்களின் சபரிமலை என அழைக்கப் படும், இந்த கோயிலில் நடை பெறும் மாசி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நாளை (2ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மண்டைக்காடு தேவசம் தந்திரி மகாதேவ அய்யர் கொடியேற்றுகிறார். பின்னர் பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 6.30க்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கின் றன. முன் னதாக நாளை அதிகாலை 4.30க்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோம மும், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும் நடக் கிறது.
மார்ச் 11ம் தேதி வரை 10 நாட்கள் மாசி திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வலியபடுக்கை பூஜை மார்ச் 7ம் தேதி, 6ம் திருவிழாவன்று நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள், வலியபடுக்கை பூஜை (மஹா பூஜை) நடக்கிறது. 9ம் திருவிழாவான மார்ச் 10ம் தேதி இரவு 9.30க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும், பெரிய சக்கர தீவட்டி மற்றும் அலங் கார பவனி வருதல் நிகழ் ச்சியும் நடக்கிறது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்குபூஜை 10ம் நாள் திருவிழாவான, மார்ச் 11ம் தேதி நடக்கிறது.
அன்று இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை தீபாராதனையும் நடக்கிறது. 3ம் திருவிழா முதல் 9ம் திருவிழா வரை ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நாள் திருவிழா நாளை (2ம் தேதி) இந்து சேவா சங்க 77வது சமய மாநாடு தொடங்குகிறது. இதில் அமைச்சர் பச்சை மால், கேரள அமைச்சர் சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் ஞானசேகர், கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் மற்றும் நிர்வாகிகள், சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர். மண்டைக்காடு கோயில் திருவிழாவையொட்டி கேரளாவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். பெண் கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய வண்ணம் உள்ளனர்.திருவிழா தொடங்கியவுடன் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் குவிக்கப்படுகிறார்கள். சுமார் 2 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணிக்கு வருகிறார்கள். வலியபடுக்கை பூஜை, ஒடுக்குபூஜை நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் கள் என்பதால் அன்றைய தினம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதே போல் மாவ ட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு கட்டுப் பாட்டு அறை மண்டைக் காட்டில் திறக்கப்படுகிறது. தீயணைப்பு துறை சார்பில் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் கடற்கரையில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர்.
குளச்சல் : மிகவும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக் காடு பகவதியம்மன் கோயி லில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 10 நாள் திரு விழா வெகு விமரிசையாக நடைபெறும். பெண்களின் சபரிமலை என அழைக்கப் படும், இந்த கோயிலில் நடை பெறும் மாசி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நாளை (2ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மண்டைக்காடு தேவசம் தந்திரி மகாதேவ அய்யர் கொடியேற்றுகிறார். பின்னர் பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 6.30க்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கின் றன. முன் னதாக நாளை அதிகாலை 4.30க்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோம மும், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும் நடக் கிறது.
மார்ச் 11ம் தேதி வரை 10 நாட்கள் மாசி திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வலியபடுக்கை பூஜை மார்ச் 7ம் தேதி, 6ம் திருவிழாவன்று நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள், வலியபடுக்கை பூஜை (மஹா பூஜை) நடக்கிறது. 9ம் திருவிழாவான மார்ச் 10ம் தேதி இரவு 9.30க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும், பெரிய சக்கர தீவட்டி மற்றும் அலங் கார பவனி வருதல் நிகழ் ச்சியும் நடக்கிறது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்குபூஜை 10ம் நாள் திருவிழாவான, மார்ச் 11ம் தேதி நடக்கிறது.
அன்று இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை தீபாராதனையும் நடக்கிறது. 3ம் திருவிழா முதல் 9ம் திருவிழா வரை ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நாள் திருவிழா நாளை (2ம் தேதி) இந்து சேவா சங்க 77வது சமய மாநாடு தொடங்குகிறது. இதில் அமைச்சர் பச்சை மால், கேரள அமைச்சர் சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் ஞானசேகர், கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் மற்றும் நிர்வாகிகள், சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர். மண்டைக்காடு கோயில் திருவிழாவையொட்டி கேரளாவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். பெண் கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய வண்ணம் உள்ளனர்.திருவிழா தொடங்கியவுடன் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் குவிக்கப்படுகிறார்கள். சுமார் 2 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணிக்கு வருகிறார்கள். வலியபடுக்கை பூஜை, ஒடுக்குபூஜை நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் கள் என்பதால் அன்றைய தினம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதே போல் மாவ ட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு கட்டுப் பாட்டு அறை மண்டைக் காட்டில் திறக்கப்படுகிறது. தீயணைப்பு துறை சார்பில் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் கடற்கரையில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குமரியில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை இன்று காலை தொடங்கியது
» மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 8ம் கொடை விழா
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 8ம் கொடை விழா
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya