கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
முருகப் பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலில் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர்.
உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கோவில் வளாகத்தில் தங்கி விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது.
நேற்று மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானை அம்பாளுக்கு திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதைதொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 6-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும்.
நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. சூரசம்ஹார நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
சுவாமி ஜெயந்திநாதர், சூரபதுமனை வதம் செய்யும் காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள்கிறார்கள். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரி வீதி வலம் வந்து, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடக்கிறது. அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது. 7-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார்.
மாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.
சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) இரா.ஞானசேகர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கோவில் வளாகத்தில் தங்கி விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது.
நேற்று மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானை அம்பாளுக்கு திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதைதொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 6-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும்.
நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. சூரசம்ஹார நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
சுவாமி ஜெயந்திநாதர், சூரபதுமனை வதம் செய்யும் காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள்கிறார்கள். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரி வீதி வலம் வந்து, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடக்கிறது. அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது. 7-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார்.
மாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.
சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) இரா.ஞானசேகர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பழனியில் நாளை கந்தசஷ்டி விழா தொடக்கம்: 29–ந்தேதி சூரசம்ஹாரம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya