நவராத்திரி முதல் 3 நாள் துர்க்கை வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவராத்திரி முதல் 3 நாள் துர்க்கை வழிபாடு
எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, முதன்மை வழிபாடாக பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது. பராசக்தியை வழிபட்டால் எல்லா கடவுள் அவதாரங்களையும் வழிபடும்போது என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அத்தனை பலன்களும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பராசக்தியான அம்பிகை ஒருத்திதான்.
ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள். அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. 9 நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.
இந்த 9 நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள். முதல் 3 நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள். அடுத்த 3 நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள். இறுதி 3 நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.
இந்த 9 நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும். பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
அந்த வகையில் இச்சா சக்தியான துர்க்கை அம்மன் முதல் 3 நாட்களில் மகேஸ்வரி, கவுமாரி, வாராகி என்ற பெயர்களில் வழிபடப்படுகிறாள். அதாவது மதுகைடபர்களை வதம் செய்வது நவராத்திரி முதல் நாளாகக் கருதப்படுகிறது. மதுகைடபர்களை வதம் செய்வதற்காக அம்பிகை மகேஸ்வரி வடிவம் எடுத்தாள்.
இதை குமாரி வடிவம் என்றும் சொல்வார்கள். இந்த வடிவத்துக்கு அபயம், வரதம், புத்தகம், அட்ச மாலை தாங்கிய தோற்றமாக மகேஸ்வரி தோற்றம் கருதப்படுகிறது. மகேஸ்வரி அல்லது குமாரி வடிவத்தில் துர்க்கையை வழிபட்டால் வறுமை நீங்கும். வாழ்நாள் பெருகும். நவராத்திரி 2-ம் நாள் துர்க்கை கவுமாரி வடிவம் எடுப்பாள்.
இந்த அவதாரத்தின் நோக்கம் மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படும் கோலமாகும். எனவே கவுமாரி கரும்பு வில், மலரம்பு, பாசாங்குசம் ஏந்தி காட்சி அளிப்பாள். இந்த தோற்றத்தில் துர்க்கையை ராஜர ராஜேஸ்வரி என்றும் அழைப்பார்கள்.
நவராத்திரி இரண்டாம் நாள் இவளை வழிபட நோய்கள் நீங்கும். உடல்நலம் பெருகும். நவராத்திரி 3-ம் நாள் மகிஷாசுரன் வதம் செய்யப்படும் நாளாகும். மகிஷாசுரனை வதம் செய்ய துர்க்கை வாராகி வடிவம் எடுப்பாள். அன்று வாராகிக்கு கையில் சூலத்துடன் அலங்காரம் செய்யப்படும்.
மகிஷாசுரன் தலைமீது கைவைத்த கோலத்திலும் அலங்காரம் செய்வார்கள். இதனால் நவராத்திரி 3-ம் நாள் அலங்காரத்தை கல்யாணி, கன்யா என்றும் சொல்வார்கள். வாராகி, கல்யாணி, கன்யா தோற்றத்தில் துர்க்கையை வழிபட தனதான்யம் பெருகும். உங்கள் வாழ்வு செழிக்கும்.
இப்படி நவராத்திரி முதல் 3 நாட்கள் துர்க்கை நமக்கு பலவித நன்மைகளை வாரி வழங்குகிறாள். இந்த நன்மைகளை பெற வேண்டுமானால் நவராத்திரி முதல் 3 நாட்களும் நாம் மனம் உருகி துர்க்கையை வழிபடுதல் வேண்டும்.
ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள். அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. 9 நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.
இந்த 9 நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள். முதல் 3 நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள். அடுத்த 3 நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள். இறுதி 3 நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.
இந்த 9 நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும். பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
அந்த வகையில் இச்சா சக்தியான துர்க்கை அம்மன் முதல் 3 நாட்களில் மகேஸ்வரி, கவுமாரி, வாராகி என்ற பெயர்களில் வழிபடப்படுகிறாள். அதாவது மதுகைடபர்களை வதம் செய்வது நவராத்திரி முதல் நாளாகக் கருதப்படுகிறது. மதுகைடபர்களை வதம் செய்வதற்காக அம்பிகை மகேஸ்வரி வடிவம் எடுத்தாள்.
இதை குமாரி வடிவம் என்றும் சொல்வார்கள். இந்த வடிவத்துக்கு அபயம், வரதம், புத்தகம், அட்ச மாலை தாங்கிய தோற்றமாக மகேஸ்வரி தோற்றம் கருதப்படுகிறது. மகேஸ்வரி அல்லது குமாரி வடிவத்தில் துர்க்கையை வழிபட்டால் வறுமை நீங்கும். வாழ்நாள் பெருகும். நவராத்திரி 2-ம் நாள் துர்க்கை கவுமாரி வடிவம் எடுப்பாள்.
இந்த அவதாரத்தின் நோக்கம் மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படும் கோலமாகும். எனவே கவுமாரி கரும்பு வில், மலரம்பு, பாசாங்குசம் ஏந்தி காட்சி அளிப்பாள். இந்த தோற்றத்தில் துர்க்கையை ராஜர ராஜேஸ்வரி என்றும் அழைப்பார்கள்.
நவராத்திரி இரண்டாம் நாள் இவளை வழிபட நோய்கள் நீங்கும். உடல்நலம் பெருகும். நவராத்திரி 3-ம் நாள் மகிஷாசுரன் வதம் செய்யப்படும் நாளாகும். மகிஷாசுரனை வதம் செய்ய துர்க்கை வாராகி வடிவம் எடுப்பாள். அன்று வாராகிக்கு கையில் சூலத்துடன் அலங்காரம் செய்யப்படும்.
மகிஷாசுரன் தலைமீது கைவைத்த கோலத்திலும் அலங்காரம் செய்வார்கள். இதனால் நவராத்திரி 3-ம் நாள் அலங்காரத்தை கல்யாணி, கன்யா என்றும் சொல்வார்கள். வாராகி, கல்யாணி, கன்யா தோற்றத்தில் துர்க்கையை வழிபட தனதான்யம் பெருகும். உங்கள் வாழ்வு செழிக்கும்.
இப்படி நவராத்திரி முதல் 3 நாட்கள் துர்க்கை நமக்கு பலவித நன்மைகளை வாரி வழங்குகிறாள். இந்த நன்மைகளை பெற வேண்டுமானால் நவராத்திரி முதல் 3 நாட்களும் நாம் மனம் உருகி துர்க்கையை வழிபடுதல் வேண்டும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய வழிபாடு
» நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு
» திருமணம் தடை தீர்க்கும் நவராத்திரி நான்காம் நாள் சதுர்த்தி திதி வழிபாடு
» முதல் நாள் மகேஸ்வரி அலங்காரம் (24.9.14)
» செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு
» நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு
» திருமணம் தடை தீர்க்கும் நவராத்திரி நான்காம் நாள் சதுர்த்தி திதி வழிபாடு
» முதல் நாள் மகேஸ்வரி அலங்காரம் (24.9.14)
» செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya