ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்
இந்து மதத்தில் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அதாவது விரதம் என்பது குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்காக கடைபிடிக்கப்படுவது.
வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக உள்ளது. எந்த நாளில் எந்த தெய்வத்திற்கு விரதம் இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.
* ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை உணவு அருந்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மாலை கோவிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்த பின் சூரியன் மறைவதற்குள் சாப்பிட வேண்டும். இந்த விரதத்தை கடைபிடிக்கும் போது சாப்பாட்டில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. சூரிய பகவானுக்கு சிவப்பு கலர் மலர்களை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்..
* திங்கள்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாகும்.இதனை சோமவார விரதம் என்றும் கூறுவர். எனவே திங்களன்று விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி சிவபெருமாளுக்கு பூஜை செய்து ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை அன்றைய தினம் முழுவதும் சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் சிவபுராணத்தையும் படிக்கலாம். திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைப்பதற்காகவும், மகிழ்ச்சியான மற்றும் வளமான குடும்ப வாழ்க்கைக்காகவும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.
* செவ்வாய்கிழமை விநாயகர், துர்க்கை, காளி மற்றும் அனுமன் போன்ற தெய்வங்களுக்கு கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த கிழமையில் விரதமிருந்து கோவிலுக்கு சென்று வரலாம். மேலும் உப்பு சேர்க்காத உணவை ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும். அன்றைய தினம் சிவப்பு வண்ண உடை அணிந்து சிவப்பு நிற பூக்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
* புதன் கிழமை கிருஷ்ணனுக்கு உகந்ததாகும். இந்த நாட்களில் புதிய முயற்சிகளை தொடங்கினால் மங்களகரமாக முடியும் என்பது நம்பிக்கை. கிருஷ்ண பகவானுக்கு உகந்த துளசி இலை, தயிர், வெண்ணெய், பச்சை கலர் பருப்பு இவற்றை நெய்வேத்தியமாக வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் மதியம் ஒரு வேளை மட்டும் உணவு அருந்த வேண்டும். இந்த நாளில் தான தர்மங்களை மேற்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
* வியாழன்கிழமை பகவான் விஷ்ணுவிற்கு சிறந்த தினம். பால், நெய், மஞ்சள் நிற பூ, பழங்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதமிருந்து பால் சம்பந்தப்பட்ட பொருள்கள், மஞ்சள் நிற உணவுகள் மற்றும் கொண்டைகடலை உட்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பகவத் கீதை படிக்கலாம்.
* வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த நாட்களில் துர்க்கை, மகாலட்சுமிக்கு இனிப்பு வைத்து பூஜை செய்து இரவு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளை நிற பூக்கள், நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
* சனி கிழமை சனிபகவானுக்கு உகந்த தினமாகும். கருப்பு நிற உடை சனிபகவானுக்கு உகந்தது. இந்த நாளில் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி தோஷம், ஏழரை சனி நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் சனியின் தாக்கம் குறையும்.
வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக உள்ளது. எந்த நாளில் எந்த தெய்வத்திற்கு விரதம் இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.
* ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை உணவு அருந்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மாலை கோவிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்த பின் சூரியன் மறைவதற்குள் சாப்பிட வேண்டும். இந்த விரதத்தை கடைபிடிக்கும் போது சாப்பாட்டில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. சூரிய பகவானுக்கு சிவப்பு கலர் மலர்களை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்..
* திங்கள்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாகும்.இதனை சோமவார விரதம் என்றும் கூறுவர். எனவே திங்களன்று விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி சிவபெருமாளுக்கு பூஜை செய்து ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை அன்றைய தினம் முழுவதும் சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் சிவபுராணத்தையும் படிக்கலாம். திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைப்பதற்காகவும், மகிழ்ச்சியான மற்றும் வளமான குடும்ப வாழ்க்கைக்காகவும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.
* செவ்வாய்கிழமை விநாயகர், துர்க்கை, காளி மற்றும் அனுமன் போன்ற தெய்வங்களுக்கு கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த கிழமையில் விரதமிருந்து கோவிலுக்கு சென்று வரலாம். மேலும் உப்பு சேர்க்காத உணவை ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும். அன்றைய தினம் சிவப்பு வண்ண உடை அணிந்து சிவப்பு நிற பூக்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
* புதன் கிழமை கிருஷ்ணனுக்கு உகந்ததாகும். இந்த நாட்களில் புதிய முயற்சிகளை தொடங்கினால் மங்களகரமாக முடியும் என்பது நம்பிக்கை. கிருஷ்ண பகவானுக்கு உகந்த துளசி இலை, தயிர், வெண்ணெய், பச்சை கலர் பருப்பு இவற்றை நெய்வேத்தியமாக வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் மதியம் ஒரு வேளை மட்டும் உணவு அருந்த வேண்டும். இந்த நாளில் தான தர்மங்களை மேற்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
* வியாழன்கிழமை பகவான் விஷ்ணுவிற்கு சிறந்த தினம். பால், நெய், மஞ்சள் நிற பூ, பழங்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதமிருந்து பால் சம்பந்தப்பட்ட பொருள்கள், மஞ்சள் நிற உணவுகள் மற்றும் கொண்டைகடலை உட்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பகவத் கீதை படிக்கலாம்.
* வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த நாட்களில் துர்க்கை, மகாலட்சுமிக்கு இனிப்பு வைத்து பூஜை செய்து இரவு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளை நிற பூக்கள், நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
* சனி கிழமை சனிபகவானுக்கு உகந்த தினமாகும். கருப்பு நிற உடை சனிபகவானுக்கு உகந்தது. இந்த நாளில் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி தோஷம், ஏழரை சனி நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் சனியின் தாக்கம் குறையும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» 7 வருடங்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
» எண்வகை விரதங்கள்
» திதிகளில் வரும் மிகவும் முக்கியமான விரதங்கள்
» விளக்கேற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய்
» நவராத்திரி 9-ம் நாள் (2.10.14) போட வேண்டிய கோலம்
» எண்வகை விரதங்கள்
» திதிகளில் வரும் மிகவும் முக்கியமான விரதங்கள்
» விளக்கேற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய்
» நவராத்திரி 9-ம் நாள் (2.10.14) போட வேண்டிய கோலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya