Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்

Go down

ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் Empty ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்

Post by oviya Sun Nov 30, 2014 1:27 pm

இந்து மதத்தில் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அதாவது விரதம் என்பது குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்காக கடைபிடிக்கப்படுவது.

வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக உள்ளது. எந்த நாளில் எந்த தெய்வத்திற்கு விரதம் இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.

* ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை உணவு அருந்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மாலை கோவிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்த பின் சூரியன் மறைவதற்குள் சாப்பிட வேண்டும். இந்த விரதத்தை கடைபிடிக்கும் போது சாப்பாட்டில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. சூரிய பகவானுக்கு சிவப்பு கலர் மலர்களை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்..

* திங்கள்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாகும்.இதனை சோமவார விரதம் என்றும் கூறுவர். எனவே திங்களன்று விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி சிவபெருமாளுக்கு பூஜை செய்து ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை அன்றைய தினம் முழுவதும் சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் சிவபுராணத்தையும் படிக்கலாம். திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைப்பதற்காகவும், மகிழ்ச்சியான மற்றும் வளமான குடும்ப வாழ்க்கைக்காகவும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

* செவ்வாய்கிழமை விநாயகர், துர்க்கை, காளி மற்றும் அனுமன் போன்ற தெய்வங்களுக்கு கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த கிழமையில் விரதமிருந்து கோவிலுக்கு சென்று வரலாம். மேலும் உப்பு சேர்க்காத உணவை ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும். அன்றைய தினம் சிவப்பு வண்ண உடை அணிந்து சிவப்பு நிற பூக்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

* புதன் கிழமை கிருஷ்ணனுக்கு உகந்ததாகும். இந்த நாட்களில் புதிய முயற்சிகளை தொடங்கினால் மங்களகரமாக முடியும் என்பது நம்பிக்கை. கிருஷ்ண பகவானுக்கு உகந்த துளசி இலை, தயிர், வெண்ணெய், பச்சை கலர் பருப்பு இவற்றை நெய்வேத்தியமாக வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் மதியம் ஒரு வேளை மட்டும் உணவு அருந்த வேண்டும். இந்த நாளில் தான தர்மங்களை மேற்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

* வியாழன்கிழமை பகவான் விஷ்ணுவிற்கு சிறந்த தினம். பால், நெய், மஞ்சள் நிற பூ, பழங்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதமிருந்து பால் சம்பந்தப்பட்ட பொருள்கள், மஞ்சள் நிற உணவுகள் மற்றும் கொண்டைகடலை உட்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பகவத் கீதை படிக்கலாம்.

* வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த நாட்களில் துர்க்கை, மகாலட்சுமிக்கு இனிப்பு வைத்து பூஜை செய்து இரவு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளை நிற பூக்கள், நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

* சனி கிழமை சனிபகவானுக்கு உகந்த தினமாகும். கருப்பு நிற உடை சனிபகவானுக்கு உகந்தது. இந்த நாளில் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி தோஷம், ஏழரை சனி நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் சனியின் தாக்கம் குறையும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum