Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு

Go down

நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு Empty நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு

Post by oviya Fri Dec 05, 2014 1:00 pm

இன்று (சனிக்கிழமை) நவராத்திரி விழாவின் நான்காவது தினமாகும். நாளை அம்பிகையை மகாலட்சுமி வடிவத்தில் நாம் வழிபட வேண்டும். அன்னை ஜெயதுர்க்கை யாக சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பாள்.அரக்கர்களின் தொல்லையில் இருந்து விடுபட்ட தேவர்களும் முனிவர்களும் அவளை போற்றி துதிப்பார்கள்.

இதனால் அன்னை புன்னகை ததும்ப காட்சி அளிப்பாள். அன்னையின் இந்த கோலத்தை ரோகிணி என்றும் சொல்வார்கள். எனவே நாளைய தினம் ஆலயங்களில் அன்னையை மகாலட்சுமியாகவும் ரோகிணியாகவும் அலங்கரித்து வழிபாடு செய்வார்கள்.

இன்று அம்பாளுக்கு கதம்ப சாதம் படைக்கலாம். பூ வகைகளில் ஜாதி மல்லிகைப் பூ-வை பயன்படுத்தி அலங்காரம் செய்தும் மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்தால் அன்னை மிகவும் மகிழ்ச்சி அடைவாள்.

மேலும் இன்று அம்பிகையை பைரவி ராகத்தில் பாடி வழிபட்டால் அன்னை மனம் குளிர்ந்து அருள்வாள். இன்று அன்னை முன்பு அட்சதைகளால் படிக்கட்டுக்கள் அமைத்து கோலமிட வேண்டும் என்பது ஐதீகமாகும்.

அது போல இன்று 5- வயது சிறுமியை அழைத்து அவர்களுக்கு கஸ்தூரி மஞ்சள் பன்னீர் கொடுத்து உபசரிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் பவளம் கொடுக்கலாம். அம்மனை வழிபடும் போது ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பழம் வைத்து வழிபட வேண்டும் என்பார்கள்.

அந்த வகையில் இனறு கொய்யா பழம் வைத்து வழிபடலாம். இந்த வழிபாட்டால் எவ்வளவு பெரிய பகைகள் இருந்தாலும் அவை அனைத்தும் பனி போல கரைந்து மறைந்து விடும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum