மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன்–இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி 2–ம் பிரகாரத்தில் கொலு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இன்று (புதன்கிழமை) காலை விழா தொடங்கியது.
இக்கொலுவில் 16 அம்சங்கள் இடம் பெற்று உள்ளது. மதுரை மங்களம் என்ற பொருளில் 63 நாயன்மார்களும் இதையடுத்து நடராஜா, மீனாட்சி சன்னதி, திருக்கல்யாணம், மீனாட்சி ஊஞ்சல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜெயமங் கலம் என்ற பொருளிலும், சுபமங்களம் என்ற பொருளிலும், மீனாட்சி சீர்வரிசை, பொற்றாமரை குளம், தேரோட்டம் போன்றவையும் இடம் பெற்று உள்ளது.
இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இன்னிசை,பரத நாட்டியம், சொற்பொழிவு போன்ற ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை (26–ந்தேதி) காலை மாணவி ராஜேஸ்வரியின் பரதநாட்டியமும், இரவில் நடிகை அம்மு ராமச்சந்தி ரனின் பரதநாட்டியமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரமும், பக்தி மற்றும் தேவார இன்னிசையும், இரவில் ஆன்மீக சொற்பொழிவும் சனிக்கிழமை அம்மன் சயன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். அன்று ஆன்மீக சொற்பொழிவு, கர்நாடக சங்கீதம், பக்தி மெல்லிசை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று முருகனுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று காலை பரதநாட்டியமும், இரவில் ஆன்மீக சொற்பொழிவும், திங்கட்கிழமையன்று அம்மன் கோலாட்ட அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். அன்று காலை மற்றும் இரவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதேபோல் செவ்வாய்க்கிழமை அன்று அம்மன் தருமண கோலத்திலும் புதன்கிழமை மஹிஷாசுர மர்த்தினி அலங்காரத்திலும், வியாழக்கிழமையன்று ஆன்மீக சொற்பொழிவும், வெள்ளிக்கிழமையன்று விஜயதசமியும், அன்று மாலை வீணை வழிபாடும் நடைபெறுகிறது.
இவ்விழவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்துகண்ணன் ஆலோசனையின்படி இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
இதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி 2–ம் பிரகாரத்தில் கொலு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இன்று (புதன்கிழமை) காலை விழா தொடங்கியது.
இக்கொலுவில் 16 அம்சங்கள் இடம் பெற்று உள்ளது. மதுரை மங்களம் என்ற பொருளில் 63 நாயன்மார்களும் இதையடுத்து நடராஜா, மீனாட்சி சன்னதி, திருக்கல்யாணம், மீனாட்சி ஊஞ்சல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜெயமங் கலம் என்ற பொருளிலும், சுபமங்களம் என்ற பொருளிலும், மீனாட்சி சீர்வரிசை, பொற்றாமரை குளம், தேரோட்டம் போன்றவையும் இடம் பெற்று உள்ளது.
இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இன்னிசை,பரத நாட்டியம், சொற்பொழிவு போன்ற ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை (26–ந்தேதி) காலை மாணவி ராஜேஸ்வரியின் பரதநாட்டியமும், இரவில் நடிகை அம்மு ராமச்சந்தி ரனின் பரதநாட்டியமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரமும், பக்தி மற்றும் தேவார இன்னிசையும், இரவில் ஆன்மீக சொற்பொழிவும் சனிக்கிழமை அம்மன் சயன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். அன்று ஆன்மீக சொற்பொழிவு, கர்நாடக சங்கீதம், பக்தி மெல்லிசை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று முருகனுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று காலை பரதநாட்டியமும், இரவில் ஆன்மீக சொற்பொழிவும், திங்கட்கிழமையன்று அம்மன் கோலாட்ட அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். அன்று காலை மற்றும் இரவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதேபோல் செவ்வாய்க்கிழமை அன்று அம்மன் தருமண கோலத்திலும் புதன்கிழமை மஹிஷாசுர மர்த்தினி அலங்காரத்திலும், வியாழக்கிழமையன்று ஆன்மீக சொற்பொழிவும், வெள்ளிக்கிழமையன்று விஜயதசமியும், அன்று மாலை வீணை வழிபாடும் நடைபெறுகிறது.
இவ்விழவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்துகண்ணன் ஆலோசனையின்படி இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
இதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்
» ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்
» ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya