Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வேண்டியதை அள்ளித் தரும் எட்டீஸ்வரர்

Go down

வேண்டியதை அள்ளித் தரும் எட்டீஸ்வரர் Empty வேண்டியதை அள்ளித் தரும் எட்டீஸ்வரர்

Post by oviya Wed Dec 10, 2014 1:22 pm

மாமல்லபுரத்து உழவனான நாகன் பையனூர் சிவாலயமான எட்டீஸ்வரமுடைய நாயனார் ஆலயத்து நிலங்களில் பணி புரிந்தான். ஊர் மக்கள் நிலத் தில் வளரும் பயிரை இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து மீதியை தாங்களிடம் பெற்றுச் சென்றார்கள். நாகனுக்கும் கூலியாக ஒரு பகுதியை கொடுக்க ஒப்புக் கொண்டனர். சித்தத்தில் சிவநாமத்தை நிறுத்தி வாய்க்கால் பாய்ந்து பச்சை வயலானதுபோல ஈசனின் அருளும் அவன் உள்ளத்தை குளிர்வித்தது. லிங்க சமுத்திரம் என்றும் அழைக்கப்பட்ட அந்த பையனூர் கிராமத்தில் எட்டு லிங்கக்கல் ராஜநாகம் படமெடுத்ததுபோல கடலை நோக்கியபடி இருந்தது.

ஒவ்வொரு போகமும் விளைச்சலில் வரும் நெல்லை எட்டாவது லிங்கமான எட்டீஸ்வரர் முன்பு பரப்பி அளந்தனர். எல்லோ ருக்கும் பிரித்துக்கொடுத்து, நாகனை மட்டும் வெறுங்கையோடு வீட்டிற்கு அனுப்பினர். காரணம் கேட்டபோது அலட்சியமாக பார்த்தனர். ஒரு நாள் ஊர்ச்சபையை கூட்டினான் நாகன். ‘‘ஐயா, நானோ சிறு உழைப்பாளி. இயலாமையால் இவ்வூர் நிலங்களில் வேலை செய்து பிழைக்கிறேன். சிறு கூலியே ஆனாலும் எனக்கு இன்னும் தரப்படவில்லை. என்னை ஏமாற்றுவது என்பது ஈசனின் முன்பு செய்த சத்தியத்தை மீறுவதாகும்’’ என்று தன் குறையைக் கூறி தர்மத்தை முன்நிறுத்திச் சொன்னான்.

எல்லோரும் அவனைப் பார்த்து இலக்காரமாக சிரித் தார்கள், சபைத் தலைவர் உட்பட! ‘‘இதற்குத்தான் சபையைக் கூட்டினாயா?’’ என்ற எரிச்சலில் கூட்டம் கலைய ஆரம்பித்தது. அப்போது, ‘‘நாகனுக்கு உரியவையை அவனிடம் சேர்ப்பித்து விடுங்கள். இல்லையெனில் உங்கள் தீவினையால் வாழும்போதே நரகத்திலுள்ளது போல துடிப்பீர்கள்’’ என்று அசரீரி கேட்டது. சட்டென ஒரு ஜோதி தோன்றி எட்டீஸ்வரர் சந்நதியில் சென்று ஒடுங்கியது. அனைவரும் நாகனைப் பார் த்து மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். பேசியதற்கும் மேலாக கூலி தரவும் சம்மதித்தார்கள். நாகன் மெல்லிய சிரிப்புடன் தன் பணியைத் தொடர்ந்தான்.

இந்தத் தகவலை சேக்கிழார் பெரிய புராணத்தில் காணலாம். இந்தத் தலத்தில் இன்றும் மூலவரான எட்டீஸ்வரரும் அம்பாள் எழிலார்குழலியும் அருள் பெருக்கி அமர்ந்திருக்கிறார்கள். மூலவரின் சந்நதியே சித்தரின் ஜீவசமாதி என்கிறார்கள். குலோத்துங்கச் சோழனால் அமைக்கப்பட்ட கஜபிருஷ்டம் எனும் யானையின் பின்புறம் போன்ற அமைப்பில் கருவறை விமானம் உள்ளது. பல நூறு வருடத்து ஞாபகங்களை கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இடைக்காடார் சித்தர் இந்த இறைவனை வழிபட்டதாக குறிப்புகள் உள்ளன. இந்த இறை வனால், திருமணத்தடைகள், வழக்கு, குழந்தைபாக்கியம், நோய் ஆகிய பிரச்னைகள் தீருகின்றன.

இப்பேற்பட்ட மகிமை வாய்ந்த கோயில் தற்போது பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியாகவும் முகப்பு மண்டபம் இல்லாமலும் ராஜகோபுரம் இல்லாமலும் இருக்கிறது. தற்போது ராஜகோபுர திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருத்தலத்திற்கு 16 கால் மண்டபப் பணியும், சுற்றி மதில் சுவர் ஆகிய ஆலய திருப்பணிகள் நடைபெற இருப்பதால் பக்தகோடிகளும் தன வந்தர்களும் சிவநேய தொண்டர்களும் கிராம பொது மக்களும் பொருளாகவோ பணமாகவோ (அ) சரீர உபகாரமாகவோ தங்களால் இயன்ற உதவி செய்து ஆலயத் திருப்பணியில் பங்கு பெருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கை எட்டினால் கைலாயத்தையும் காட்டத் தயாராக இருக்கும் எட்டீஸ்வரரை இன்னும் எத்தனை காலம்தான் இதே நிலையில் வைத்திருப்பதோ அது அந்த ஈசனுக்கே வெளிச்சம். புனர்நிர்மாணப் பணியில் ஈடுபட விரும்பும் பக்தர்கள் இக்கோயிலுக்குச் செல்லலாம். இறையருளைப் பெறுவதோடு, தங்க ளால் இயன்றதைச் செய்யலாம். சென்னைக்கு அருகே திருப்போரூரில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. (தொடர்புக்கு: செல்: 9941534893).

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum