ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 9 நாள் ஊஞ்சல் உற்சவம் இன்று தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 9 நாள் ஊஞ்சல் உற்சவம் இன்று தொடங்குகிறது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் இன்று (சனிக்கிழமை ) தொடங்குகிறது. இந்த விழா 9 நாட்கள் நடைபெறும். 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.
விழாக்களில் ஒன்றான ஊஞ்சல் உற்சவம் ( டோலோத்சவம் ) இன்று(சனிக்கிழமை ) தொடங்குகிறது. இந்த விழா 19–ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.
இந்து மதத்தில் சைவ மற்றும் வைணவ பிரிவு வழிபாடுகளின்போது கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் விக்கிரகங்களுக்கும் மற்றும் உற்சவ விக்கிரகங்களுக்கும் பூஜை நைவேத்தியம் நடைபெறும். பின்னர் மேற்படி கருவறையில் உள்ள உற்சவ விக்கிரகங்களை
கருவறைக்கு வெளியே வாகனங்கள்– பல்லக்குகளில் எடுத்து வந்து அதற்குரிய மண்டபங்களில் அமரச் செய்து, உற்சவம் கொண்டாடி குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் கருவறையில் அன்றைய தினமே மீண்டும் எழுந்தருளச் செய்வது வழக்கம். இவ்விழாக்களின்போது பக்தர்கள் விதவிதமான காட்சிகளில் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்து இன்புறுவர்.
இன்று ( சனிக்கிழமை) முதல் 9 நாட்களுக்கு நம்பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு 5–30 மணிக்கு ஊஞ்சல் (டோலை ) மண்டபம் சென்றடைகிறார். இரவு 7–15 மணிக்கு அலங்காரம் கண்டருளியபின் ஊஞ்சல் ஆரம்பமாகி 8–15 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின்னர் அங்கிருந்து 9 மணிக்குபுறப்பாடாகி 9–15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இந்த தடவை புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று ஊஞ்சல் உற்சவம் தொடங் கப்பட உள்ளதால் தனிச் சிறப்புடன் விழா நடைபெறுகிறது. 9 நாட்களிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து இசை வாத்தியங்கள் முழங்கிட சாமரம் வீசி ஊஞ்சல் உற்சவத்தை தரிசனம் செய்யலாம்.
ஏற்பாடுகளை இந்து சமய அற நிலைய துறை இணை ஆணையரும் கோவில் நிர்வாக அதிகாரியுமான ஜெயராமன், மேலாளர் விஜயன் தலைமையிலான குழுவினர் செய்து வருகிறார்கள்.
இந்து மதத்தில் சைவத்திலும் வைணவத்திலும் ஈடுபாடு உடையவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற 5 சனிக்கிழமைகளைவிரதம் கடைபிடித்து விசேஷ நாளாக கொண்டாடுவார்கள். குறிப்பாக நடப்பு புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமைகள் மட்டுமே வருகிறது.
ஆனால் 5–வது சனிக்கிழமை வரவில்லை என்றால், ஐப்பசி மாதம் முதல் சனிக் கிழமையை புரட்டாசி மாத சனிக்கிழமையா ககணக்கில் எடுத்துக் கொண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
இம்மாதிரியான காலங்களில் ஒற்றைப்படையில் வரும் 3–வது சனிக்கிழமையும் விரத பூர்த்தியாக் கொள்வர்.
இன்று 4–வது சனிக் கிழமை வருகிறத. இன்றைய தினம் வைணவ கோவில் களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் நாளைய தினம் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் தொடங்குவதும் புரட்டாசி சனிக்கிழமையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாக்களில் ஒன்றான ஊஞ்சல் உற்சவம் ( டோலோத்சவம் ) இன்று(சனிக்கிழமை ) தொடங்குகிறது. இந்த விழா 19–ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.
இந்து மதத்தில் சைவ மற்றும் வைணவ பிரிவு வழிபாடுகளின்போது கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் விக்கிரகங்களுக்கும் மற்றும் உற்சவ விக்கிரகங்களுக்கும் பூஜை நைவேத்தியம் நடைபெறும். பின்னர் மேற்படி கருவறையில் உள்ள உற்சவ விக்கிரகங்களை
கருவறைக்கு வெளியே வாகனங்கள்– பல்லக்குகளில் எடுத்து வந்து அதற்குரிய மண்டபங்களில் அமரச் செய்து, உற்சவம் கொண்டாடி குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் கருவறையில் அன்றைய தினமே மீண்டும் எழுந்தருளச் செய்வது வழக்கம். இவ்விழாக்களின்போது பக்தர்கள் விதவிதமான காட்சிகளில் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்து இன்புறுவர்.
இன்று ( சனிக்கிழமை) முதல் 9 நாட்களுக்கு நம்பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு 5–30 மணிக்கு ஊஞ்சல் (டோலை ) மண்டபம் சென்றடைகிறார். இரவு 7–15 மணிக்கு அலங்காரம் கண்டருளியபின் ஊஞ்சல் ஆரம்பமாகி 8–15 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின்னர் அங்கிருந்து 9 மணிக்குபுறப்பாடாகி 9–15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இந்த தடவை புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று ஊஞ்சல் உற்சவம் தொடங் கப்பட உள்ளதால் தனிச் சிறப்புடன் விழா நடைபெறுகிறது. 9 நாட்களிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து இசை வாத்தியங்கள் முழங்கிட சாமரம் வீசி ஊஞ்சல் உற்சவத்தை தரிசனம் செய்யலாம்.
ஏற்பாடுகளை இந்து சமய அற நிலைய துறை இணை ஆணையரும் கோவில் நிர்வாக அதிகாரியுமான ஜெயராமன், மேலாளர் விஜயன் தலைமையிலான குழுவினர் செய்து வருகிறார்கள்.
இந்து மதத்தில் சைவத்திலும் வைணவத்திலும் ஈடுபாடு உடையவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற 5 சனிக்கிழமைகளைவிரதம் கடைபிடித்து விசேஷ நாளாக கொண்டாடுவார்கள். குறிப்பாக நடப்பு புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமைகள் மட்டுமே வருகிறது.
ஆனால் 5–வது சனிக்கிழமை வரவில்லை என்றால், ஐப்பசி மாதம் முதல் சனிக் கிழமையை புரட்டாசி மாத சனிக்கிழமையா ககணக்கில் எடுத்துக் கொண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
இம்மாதிரியான காலங்களில் ஒற்றைப்படையில் வரும் 3–வது சனிக்கிழமையும் விரத பூர்த்தியாக் கொள்வர்.
இன்று 4–வது சனிக் கிழமை வருகிறத. இன்றைய தினம் வைணவ கோவில் களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் நாளைய தினம் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் தொடங்குவதும் புரட்டாசி சனிக்கிழமையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது
» பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» 15 நாள் மகாளய பட்சதினம் நாளை தொடங்குகிறது
» தி.மலை தீப திருவிழா 4வது நாள் உற்சவம் : நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
» பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» 15 நாள் மகாளய பட்சதினம் நாளை தொடங்குகிறது
» தி.மலை தீப திருவிழா 4வது நாள் உற்சவம் : நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya