Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது

Go down

புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது Empty புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது

Post by oviya Sat Dec 06, 2014 11:10 am

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த ஊரின் அருகிலுள்ள அலவாய்மலையில் வாழ்ந்த சித்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணியரை வழிபட்டு இக்கிராம மக்களுக்கு தீர்த்தம் வழங்கி பக்தர்களின் நோயை தீர்த்ததாக கூறப்படுகிறது.

பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு புதிதாக 5 நிலைகளைக் கொண்டு 47 அடி உயரத் தில் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இக்கோவிலின் கும்பாபிசேக விழா வருகின்ற 12–ந் தேதி வெள்ளிக்கிழமை காலையில் நடக்கிறது.
இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மகாகணபதி, நவக்கிரக ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. இன்று காலையில் மகாலட்சுமி ஹோமம், தன, கஜ, கோ மற்றும் அஸ்வ பூஜையும், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரமும் நடக்கிறது. நாளை 11–ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு 2–ம் கால யாக பூஜை, விசேஷ சாந்தி, மாலை 5 மணிக்கு யாக சாலை பூஜை, வேத பாராயணம், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
12–ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4–30 மணிக்கு ரட்சாபந்தனம், நாடி சந்தானம், 6–15 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 7 மணிக்கு யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து கடம் புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 7–30 மணிக்கு மூலவர் விமான ராஜ கோபுரங்களுக்கு கும்பாபிசேகமும், 8–15 மணிக்கு விநாயகர், பாலசுப்பிரமணியர் சாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிசேகமும் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சாமி தரிசனம் நடக்கிறது. விழாவையொட்டி 11 மற்றும் 12–ந் தேதி இரண்டு நாட்களும் இடைவிடாது அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.கே.பாலசுப்பிரமணியம், பொருளாளர் ஆர்.காசிலிங்கம், துணைத் தலைவர் எஸ்.ராமசாமி, துணை செயலாளர் எஸ்.தேவராஜன், திருப்பணிக் குழு நிர்வாகிகள், குழு உறுப்பினர்கள், செங்குந்தர் பெருமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 30– ந் தேதி நடக்கிறது
» வளசரவாக்கம் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 15–ந் தேதி நடக்கிறது
» பரமார்த்தலிங்கபுரம் ஸ்ரீசிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது
» ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில் சனிப் பெயர்ச்சி விழா 16ம் தேதி நடக்கிறது
» மேலமாங்குழி ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 6–ந் தேதி நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum