Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஒன்பதாம் நாள் நாளை (2-10-14) சுபத்ரா பூஜை

Go down

ஒன்பதாம் நாள் நாளை (2-10-14) சுபத்ரா பூஜை Empty ஒன்பதாம் நாள் நாளை (2-10-14) சுபத்ரா பூஜை

Post by oviya Sat Dec 06, 2014 12:15 pm

நவராத்திரி நாயகிகள் வரிசையில் ஒன்பதாம் நாளான நாளை இன்று சரஸ்வதி பூஜையைச் செய்தல் வேண்டும். அம்பிகையைச் சரஸ்வதியாகத் தனியே ஆவாகனம் செய்து விட்டுச் சுபத்ரா பூஜையும், அதே பிரதிமைக்கு அருகில் தீபத்தில் இப்பூஜையை முதலாகச் செய்தல் வேண்டும்.

இன்று மஞ்சள் பொடியும், அரிசி மாவும் பயன்படுத்திக்கோலம் வரைந்து முக்கியமாக வீணைக் கோலம் வரைந்து அம்பிகையை சுபத்ராவாக ஆவாகனம் செய்து நமக்குச் சர்வ மங்களங்களும் உண்டாக ஆராதிக்க வேண்டும்.

ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி
ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி
ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி
ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி
ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி
ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி
ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி
ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி
ஓம் ஆறாறு தத்துவம் அருளினாய் போற்றி
ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி
ஓம் ஓசை விந்து நாத உட்பொருளாய் போற்றி
ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி
ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி
ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி
ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி
ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!

இன்றைய தினம் நாகப்பழத்துடன் தளர்ந்த சர்க்கரைப் பொங்கல், வடை, வெண் பொங்கல், பாலால் செய்த திரட்டுப் பால் செய்து, தேங்காய் பழம், தாம்பூலம் நிவேதனம் செய்யவும். வெண் தாமரை மலருடன் சிவப்புத் தாமரை, பன்னீர் ரோஜா மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து வசந்தா ராகக் கீர்த்தனையைப்பாடி ஆரத்தி எடுக்கவேண்டும்.

இன்று புத்தகங்களை அடுக்கிப் பூஜை செய்யும்நாள். ஆதலால் அவற்றிற்கு விசேஷ சரஸ்வதி துதி பாடுதல் வேண்டும்.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய
உருப்பளிங்கு போல்வார் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பன் இங்கு வராது இடர்
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போற்கையும் துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி செஞ்சொல்
தார்தந்த என்மனத் தாமரையாட்டி சரோருக மேல்
பார் தந்த நாதன் இசை தந்த ஆரணப் பங்கயத்தாள்
வார் தந்த சோதி அம்போருகத்தாளை வணங்குதுமே.

-இத்துதியைப் பாடி முடித்த பிறகு ஒன்பதாம் நாளுக்குரிய அபிராமி அந்தாதிப் பாடலைப்பாட வேண்டும்.

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகு
எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள்
என்றன் நெஞ்சின் உள்ளே
பொன்றாது
நின்று புரிகின்ற வாரிப்பொருள்
அறிவார்
அன்றால் இலையில் துயின்ற பெம்மானும்
என் ஐயனுமே.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum