விழுதியூர் மீனாட்சி - சொக்கலிங்க சுவாமி திருக்கோயில்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
விழுதியூர் மீனாட்சி - சொக்கலிங்க சுவாமி திருக்கோயில்
மன்னன் மலயத்துவச பாண்டியனுக்கும் அவனது மனைவி காஞ்சனமாலைக்கும் எந்தக் குறையும் இல்லைதான். ஆனால், பாண்டிய நாட்டைத் தொடர்ந்து ஆள, அதற்குமுன் தாங்கள் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மட்டும் முள்ளாய், உள்ளத்தை ரணமாக்கிக் கொண்டிருந்தது.என்ன செய்யலாம் என யோசனை கேட்டவனுக்கு ரிஷிகள் சொன்ன நிவாரணம்: ‘‘புத்திர காமேஷ்டி யாகம் செய்.’’ அரசன் வேள்வியைத் தொடங்கினான். அக்கினி கொண்டு சென்ற அவிர்பாகத்தால் குளிர்ந்த தேவர்கள், அன்னை பராசக்தியிடம் முறையிட, தேவர்களின் கோரிக்கையும் அன்னையின் கருணையும் பாண்டிய மன்னன் வளர்த்த யாகத்தீயில் குழந்தையாய் தேவியை உதிக்கச் செய்தது.
அக்கினியில் அவதரித்த அழகுக் குழந்தையை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்த மன்னன், குழந்தைக்கு மூன்று ஸ்தனங்கள் இருப்பது கண்டுத் திகைத் தான். ‘‘இந்த குழந்தை தன் கணவனைக் காணும் போது ஒரு ஸ்தனம் மறையுமென்றும் ‘குழந்தைக்கு தடாதகை என்று பெயர் சூட்டு’ என்றும் பணித்தது தெய்வ வாக்கு. அப்படியே செய்தான் அரசன். கால ஓட்டத்தில் அரசன் மறைய, அன்னை ஆட்சிப் பொறுப்பேற்றாள். அகிலத்தையே தன் கட்டுக்குள் கொண்டு வர விரும்பி திக் விஜயம் செய்தபோது பரமனைக் கண்டாள். முக்கண்ணன் தரிசனம் கண்ட தடாதகையின் மூன்றாவது ஸ்தனம் மறைய, பரந்தாமன் துணையோடு பரமன் கை சேர்ந்தாள். தொடர்ந்து மீனாட்சியாய் மக்களைக் காத்தாள். பாண்டிய தேச மக்கள் பரவசமாய் வாழ்ந்தார்கள்.
-இது நாம் கேட்டு குளிர்ந்த தெய்வீகக் கதை. இந்த கதையோடு சிலிர்த்து வளர்ந்தவர்கள், இதை மனதில் ஊற்றி ஊறிக் களித்தவர்கள், தாம் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அம்மைக்கும் அப்பனுக்குக் கோயில் அமைத்து, அருகிலேயே தாமும் குடி அமர்ந்தார்கள். அப்படி அமைந்ததுதான் திரு வாரூர் மாவட்டம், குடவாசல்-சேதனிபுரம் அருகே விழுதியூரில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன்-சொக்கலிங்க சுவாமி கோயில். இது எப்போது உரு வானது என்பது தெரியாததிலேயே இதன் பழமையும் தெரிகிறது.
அரனும் அம்மையும் அமைந்துள்ள எழில் கோலம் காண கண் கோடி வேண்டும். ஒரு முனிவருக்கு அன்னை திருமணக் கோலம் காட்டி இங்கு கோயில் கொண்டாள் என்றொரு காது வழிக் கதை உண்டு. இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகனை செவ்வாய்க் கிழமைகளில் அரளி மாலை சாத்தி, பாலபிஷேகம் செய்து வழிபட, சரும நோய் நீங்கும் என்கிறார்கள். இது தவிர விநாயகர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராய் ஸ்ரீநிவாசப்பெருமாள் என புராதன ஆகம அமைப்போடு அமைந்திருக்கும் கோயில் சிதிலங்களிலிருந்து சிவநேசர்களால் மீண்டு வருகிறது. அக்டோபர் 28ந்தேதி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பணி மிக வேகமாக நடந்து வருகிறது.
அக்கினியில் அவதரித்த அழகுக் குழந்தையை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்த மன்னன், குழந்தைக்கு மூன்று ஸ்தனங்கள் இருப்பது கண்டுத் திகைத் தான். ‘‘இந்த குழந்தை தன் கணவனைக் காணும் போது ஒரு ஸ்தனம் மறையுமென்றும் ‘குழந்தைக்கு தடாதகை என்று பெயர் சூட்டு’ என்றும் பணித்தது தெய்வ வாக்கு. அப்படியே செய்தான் அரசன். கால ஓட்டத்தில் அரசன் மறைய, அன்னை ஆட்சிப் பொறுப்பேற்றாள். அகிலத்தையே தன் கட்டுக்குள் கொண்டு வர விரும்பி திக் விஜயம் செய்தபோது பரமனைக் கண்டாள். முக்கண்ணன் தரிசனம் கண்ட தடாதகையின் மூன்றாவது ஸ்தனம் மறைய, பரந்தாமன் துணையோடு பரமன் கை சேர்ந்தாள். தொடர்ந்து மீனாட்சியாய் மக்களைக் காத்தாள். பாண்டிய தேச மக்கள் பரவசமாய் வாழ்ந்தார்கள்.
-இது நாம் கேட்டு குளிர்ந்த தெய்வீகக் கதை. இந்த கதையோடு சிலிர்த்து வளர்ந்தவர்கள், இதை மனதில் ஊற்றி ஊறிக் களித்தவர்கள், தாம் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அம்மைக்கும் அப்பனுக்குக் கோயில் அமைத்து, அருகிலேயே தாமும் குடி அமர்ந்தார்கள். அப்படி அமைந்ததுதான் திரு வாரூர் மாவட்டம், குடவாசல்-சேதனிபுரம் அருகே விழுதியூரில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன்-சொக்கலிங்க சுவாமி கோயில். இது எப்போது உரு வானது என்பது தெரியாததிலேயே இதன் பழமையும் தெரிகிறது.
அரனும் அம்மையும் அமைந்துள்ள எழில் கோலம் காண கண் கோடி வேண்டும். ஒரு முனிவருக்கு அன்னை திருமணக் கோலம் காட்டி இங்கு கோயில் கொண்டாள் என்றொரு காது வழிக் கதை உண்டு. இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகனை செவ்வாய்க் கிழமைகளில் அரளி மாலை சாத்தி, பாலபிஷேகம் செய்து வழிபட, சரும நோய் நீங்கும் என்கிறார்கள். இது தவிர விநாயகர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராய் ஸ்ரீநிவாசப்பெருமாள் என புராதன ஆகம அமைப்போடு அமைந்திருக்கும் கோயில் சிதிலங்களிலிருந்து சிவநேசர்களால் மீண்டு வருகிறது. அக்டோபர் 28ந்தேதி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பணி மிக வேகமாக நடந்து வருகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீ மீனாட்சி ஸ்தோத்ரம்
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
» சுவாமி ஐயப்பன் பாடல்
» திருவண்ணாமலையில் சுவாமி - அம்பாள் கிரிவலம்
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
» சுவாமி ஐயப்பன் பாடல்
» திருவண்ணாமலையில் சுவாமி - அம்பாள் கிரிவலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya