திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீப திருவிழா 26–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீப திருவிழா 26–ந் தேதி தொடங்குகிறது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகைதீப திருவிழா வருகிற 26–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 5–ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் கெடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகைதீப திருவிழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கார்த்திகைதீபத்தன்று திருவண்ணாமலையில் கூடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகைதீப திருவிழா வருகிற 26–ந் தேதி(புதன்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சாமி, அம்மன் உள்பட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து விநாயகர், முருகர், சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தின் அருகில் எழுந்தருள்வார்கள். தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கும். முதல் நாள் கொடியேற்றம் நடைபெற்றதும் பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியை சுற்றி வருவார்கள். இரவிலும் பஞ்சமூர்த்திகள் வீசிஉலா நடக்கும்.
தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கும். 6–வது நாள் திருவிழாவான 1–ந் தேதி இரவு வெள்ளித்தேரோட்டம் நடக்கும். அன்று முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
7–வது நாளான 2–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. காலை 6.05 மணிக்குமேல் 7.05 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டு, தொடர்ந்து முருகர் தேர் இழுக்கப்படும். மாலையில் சாமிதேர் (பெரியதேர்) இழுக்கப்படும்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுப்பார்கள். இந்த தேர் நிலைக்கு வந்ததும் அம்மன் தேர் இழுக்கப்படும். இதை முழுக்க முழுக்க பெண்களே இழுப்பார்கள். அதன் கூடவே சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 5–ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு சாமிசன்னதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த மகாதீபத்தை காண 20 லட்சம் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். இந்த ஆண்டும் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பாத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திகைதீப திருவிழாவுக்கு முன்னதாக 3 நாட்கள் உற்சவம் நடக்கும். அதன்படி 23–ந் தேதி துர்க்கையம்மன் உற்சவமும், 24–ந் தேதி பிடாரியம்மன் உற்சவமும், 25–ந் தேதி விநாயகர் உற்சவமும் நடக்கிறது.
மகாதீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து 3 நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். முதல் நாளான 6–ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 7–ந் தேதி பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், 8–ந் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறும்.
இந்த தகவலை கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் தெரிவித்து உள்ளார்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் கெடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகைதீப திருவிழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கார்த்திகைதீபத்தன்று திருவண்ணாமலையில் கூடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகைதீப திருவிழா வருகிற 26–ந் தேதி(புதன்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சாமி, அம்மன் உள்பட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து விநாயகர், முருகர், சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தின் அருகில் எழுந்தருள்வார்கள். தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கும். முதல் நாள் கொடியேற்றம் நடைபெற்றதும் பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியை சுற்றி வருவார்கள். இரவிலும் பஞ்சமூர்த்திகள் வீசிஉலா நடக்கும்.
தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கும். 6–வது நாள் திருவிழாவான 1–ந் தேதி இரவு வெள்ளித்தேரோட்டம் நடக்கும். அன்று முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
7–வது நாளான 2–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. காலை 6.05 மணிக்குமேல் 7.05 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டு, தொடர்ந்து முருகர் தேர் இழுக்கப்படும். மாலையில் சாமிதேர் (பெரியதேர்) இழுக்கப்படும்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுப்பார்கள். இந்த தேர் நிலைக்கு வந்ததும் அம்மன் தேர் இழுக்கப்படும். இதை முழுக்க முழுக்க பெண்களே இழுப்பார்கள். அதன் கூடவே சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 5–ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு சாமிசன்னதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த மகாதீபத்தை காண 20 லட்சம் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். இந்த ஆண்டும் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பாத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திகைதீப திருவிழாவுக்கு முன்னதாக 3 நாட்கள் உற்சவம் நடக்கும். அதன்படி 23–ந் தேதி துர்க்கையம்மன் உற்சவமும், 24–ந் தேதி பிடாரியம்மன் உற்சவமும், 25–ந் தேதி விநாயகர் உற்சவமும் நடக்கிறது.
மகாதீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து 3 நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். முதல் நாளான 6–ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 7–ந் தேதி பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், 8–ந் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறும்.
இந்த தகவலை கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் தெரிவித்து உள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருவண்ணாமலை கோயிலில் 17ம் தேதி தீபத் திருவிழா
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவில்: கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவில்: கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya